August 1, 2010

கண்ணீர் அஞ்சலி!

ஏனோ நீயாக வந்தாய்
என்னுடனே இருந்தாய்
சட்டன்று மறைந்தாய்... என் பூனை நண்பனே!
பலருக்கு நீ வெறும் பூனை- ஓர் பிராணி...
எனக்கோ நீ நல்ல நண்பன்...
என் தனிமைக்கு இனிமை,
என் வெறுமைக்கு துணிவு,
என் இருண்ட கணங்களுக்கு ஓர் ஒளிகீற்று!
என் துயில் இல்லா இரவுகளை,
உன் துயில் இழந்து பகிர்ந்தவன்!
சதா என்னுடனே இருந்துவிட்டு
இன்று சட்டென இறந்துவிட்டாய்...
என்னை மீண்டும் தனிமையில், வெறுமையில் விட்டுவிட்டு!
நான் விரும்பிய எதுவும் என்னுடன்
வாசம் செய்ய விரும்புவதில்லை...
நீ மட்டும் என்ன விதிவிலக்கா?
உன் உயிர் அமைதியாக இருக்க
என்றும் இறைவனைவேண்டி சமர்பிக்கிறேன்
என் இன்னியவனே (பூனை குட்டி)!


No comments: