August 11, 2010

ஓயா நரக ஓட்டம்!

இமைகள் மூடும் சில நிமடங்களில்
கனவுகள் வளர்கிறது:
யாருமில்லா பசுமை பாதையில்
நீண்ட வழி நடைப்பயணம்
என் சுமைகள் சுமந்து,
துணை வரும் ஒற்றை நண்பன்;
வணிகம் இல்லா வாழ்வு
பொருளின் பொருள் அறியாமல்
பொருப்பரியா குழந்தையென நான்!


சட்டென விழித்தேன்,
நிஜங்கள் நெருடுகிறது:
நிலையறியா ஓட்டம்
நகரத்தின் நரக கூச்சலில்
வரும் கணமே  மாயமாய் மறையும்
மாய(த) ஊதியதின் உபயம் நோக்கி...
சுயத்தை நொறுக்கும் பொறுப்புகளின் நெருக்கடியில்
எல்லை இல்லா பயணம்...
உணர்வுகள் தளர்கிறது:
என்று ஓயும் இந்த ஓயா ஓட்டமென!

No comments: