January 25, 2010

என் அழகிய நிலவே!

கற்று அறிந்த கல்வியும் கணமாய் யாக,
தட்டுதடுமாறி வெட்டவெளியில் ஊசலாடியபடி,
என் லட்சிய கனவுகள்!!!
வேற்று கிரகவாசிகளுடன் வாசம் செய்கிறேன்
சற்றும் எதிர்பாராமல் ஓர் சலணம்!
சிதறிய நம்பிக்கை கண்ணாடி துண்டுகள்,
ஓர் வடிவமாய் உன் பிம்பம் எதிரொலிக்க!
புத்துயிர் பெற்றேன் வெண்ணிலா உன்னை கண்டு...
எட்டி பிடிக்க முற்பட்டேன் சுட்டெரித்துவிட்டாய்!
நிலவே, உன்னுடன் உலவிய அழகிய கணங்கள்...
ரணங்களாக நித்தம் நீடிக்கிறது!
என் வாழ்வில் வசந்தமாய் வந்த நிலவே
நீ சுட்டெரிப்பினும் உன்னை வட்டமிட்டு
உன் பால் வெளிச்சம் கலங்காமல் காப்பேன்!



No comments: