January 12, 2010

மழை

மழை என்னும் மங்கை,
பூமியில் தக திமி ஆடும் கணத்தில்,
 என் மனமும் தாளத்தில் சேரும் தருணம்
கண்ணில் ஆனந்தம், நெஞ்சில் பொன்மேகம்
மீட்டும் ஜதியில்……..
என் பரதம் அறிய கால்கள்
என்னை மறந்து அரகேற்றம் செய்தது…….
இயற்கையின் அழகில் எனது பருவத்தின்
போலி ஆடை கரைந்து ஓட
நான் என்னை மறந்து
என் சுற்றம் மறந்து
 மழையில் ஆடினேன் நடனம்!!!

No comments: