April 2, 2013

அழியா நினைவலைகள்

இமை விரிந்தவுடன்
இல்லை என்றான கனா நீ
கோடி கோடி இன்பம் தந்தாய்
கடலென துன்பமும் தந்தாய்
தாயென நினைத்தேன்
தவறென உணர்த்திவிட்டாய்

தவம்தான் செய்கின்றேன் ஆண்டுகள் பல
கனவென வந்த உன் நினைவுகள் களைய
இறைக்கூட துணையில்லை கரைகடக்க
சுழன்று சுழன்று ஒற்றை சுழியில் நினைவலைகள்!

No comments: