October 1, 2011

இனியவன்

இமை மூடிய பொழுதெல்லாம்
இன்-முகம் நெருட,
கண்களை கசக்கினாலும்,
கசங்காத நினைவுகள்!
கனிவாய் பழகிய நாட்கள்
நெஞ்சை நெகிழவைத்த தருணங்கள்
நன்றி உரைப்பினும் நழுவவில்லை....
ஒற்றை ஆண்டு சேமித்த தேன் துளிகள்
இன்மொழி செவியரையைவிட்டு செல்லவில்லை
கனவுகள் நிறைந்த இரவுகள்
கற்றை கற்கள் எரிந்தும் கலையவில்லை 
கதறி கதறி அழுதுவிட்டேன்
உதறிய பின்னும் நெஞ்சம் உலரவில்லையே!

No comments: