கண்கள் கொள்ளா கொள்ளைக் கொள்ளையாய்
கொட்டிவைத்த கனவுகள்
காலம் கரைந்து ஓடியபின்னும்...
கனவுகள் மட்டும் கரையவில்லையே
காதலித்து களைத்து போன பின்னும்
காதலின் மீது மட்டும் களைப்பு வரவில்லை
அன்பின் ஆற்றலின்றி நிகழ்காலத்தின்
நிர்பந்தத்தில் சிக்கி சிதைந்துக் கொண்டிருக்கிறேன்...
மனதோரத்தில் ஏக்கம்:
சட்டென பட்ட மரம் துளிர்க்காதோ
இம்முறையேனும் மாற்றம் மலராதோ
உறவுகள் அறிவுரைத்த போதும்
சரியென்று சலிப்பு வரவில்லை என் மேல் எனக்கு!
No comments:
Post a Comment